மேலும்

மாதம்: November 2017

வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் புதிய சாதனை

அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

56 சீன படையதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பெரியதொரு இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இன்று கைது செய்யப்படுகிறார் கோத்தா?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று அழைக்கப்படவுள்ள கோத்தாபய ராஜபக்ச, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் மூகாம்பிகையை தரிசித்தார் சிறிலங்கா பிரதமர்

நான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்தார்.

பதவிநீக்கத்துக்கு எதிரான டெனீஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, தொடர்ந்து விசாரிக்குமாறு சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈபிஆர்எல்எவ்வுக்குள் குழப்பம் – தமிழ் அரசுக் கட்சிக்கு தாவினார் ரவிகரன்

வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான துரைராசா ரவிகரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று பெங்களூர் செல்லும் சிறிலங்கா பிரதமர், உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் கைதிகளில் 10 பேர் மாத்திரம் மோசமான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் – சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எட்கா உடன்பாடு குறித்து இந்தியாவுடன் அடுத்தமாதம் பேச்சு – மலிக் சமரவிக்கிரம

இந்தியாவுடனான எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்த அடுத்தகட்டப் பேச்சுக்கள், அடுத்தமாதம் நடைபெறும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.