மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை

ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்

1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக்  கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார்.

சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்

சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பல்வேறு வன்முறைக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் பௌத்த பிக்கு ஒருவர் சிறிலங்கா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு

ஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தொலைபேசியில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டிருந்தார்.

குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும் கேட்க முடியும். இந்திய மாக்கடலை அண்டிய காலி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமான கதிரேசன் ஆலயமானது கொழும்பில் வாழும் தமிழ் மக்களால் வழிபடப்படும் ஒரு வணக்கத் தலமாகக் காணப்படுகிறது.

தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி

சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

சிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாரங்கள் என்பது நீளமானது, நவம்பர் 16 இல்  நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் போது நிறைய மாற்றங்கள் இடம்பெற்றுவிடும்.  அது இரத்தக்களரியை ஏற்படுத்தி விடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்திருந்தார்.

சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்

கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவில் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிலவிவந்த அரசியல் முறுகல்நிலையானது தற்போது ஒரளவு தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் பிறிதொரு அயல்நாடான சிறிலங்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட அரசியல் முறுகல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.