மேலும்

நாள்: 22nd November 2017

பிக்குகள், இராணுவ குடும்பத்தினரை வேட்பாளர்களாக நிறுத்துகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் போட்டியிடவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அதிகளவில் பௌத்த பிக்குகளையும், படையினரின் குடும்ப உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு 6 மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறுமாத சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

காணாமல்போனோர் பணியகம் அடுத்த ஆண்டே முழுஅளவில் செயற்படும் – மனோ தித்தவெல

காணாமல்போனோருக்கான பணியகம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுப் பகுதியிலேயே முழு அளவில் செயற்படத் தொடங்கும் என்று நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மனோ தித்தவெல தெரிவித்துள்ளார்.

தென்கொரியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்தவாரம் தென்கொரியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 28ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை – உள்ளூராட்சித் தேர்தலுக்கு அடுத்த ஆப்பு?

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்து, உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் கைதிகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு சிறிலங்கா படைத்தளபதிகள் உத்தரவிட்டனரா?

சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் புதிய சாதனை

அடுத்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

56 சீன படையதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பெரியதொரு இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இன்று கைது செய்யப்படுகிறார் கோத்தா?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று கைது செய்யப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்காக இன்று அழைக்கப்படவுள்ள கோத்தாபய ராஜபக்ச, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் மூகாம்பிகையை தரிசித்தார் சிறிலங்கா பிரதமர்

நான்கு நாட்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று உடுப்பியில் உள்ள, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று தரிசனம் செய்தார்.