மேலும்

நாள்: 6th November 2017

ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளியன்று கொழும்பு வரும் சீனப் போர்க்கப்பல் – அம்பாந்தோட்டைக்கும் செல்கிறது?

இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018இல் வணிகம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்

2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது.

குறுகிய ஒற்றையாட்சி மனோநிலை அழிவுகளுக்கே வழிவகுக்கும்

சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கு (SC Spl 03/2014 -Decided on 04/08/2017)  தொடர்பாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிறிலங்கா  உச்சநீதிமன்றம் அளித்த  தீர்ப்பானது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது இடம்பெறும் புதிய அரசியலமைப்பு மீதான விவாதமானது, அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது.

மார்ச் மாதம் இந்திய நிறுவனத்தின் வசமாகிறது மத்தல விமான நிலையம்

மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையம், எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமரை மொட்டுக்குத் தலைமையேற்கிறார் மகிந்த – அனுராதபுரவில் முதல் பரப்புரைக் கூட்டம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் டிசெம்பர் 8இல் சீன நிறுவனத்திடம் கையளிப்பு

சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகார சபையும் இணைந்து, எதிர்வரும், டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை, கூட்டு முயற்சியாக இயக்கவுள்ளன.