மேலும்

மாதம்: February 2026

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுமாறு அங்லிகன் ஆயர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை  திரும்பப் பெற வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை (Church of Ceylon) ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஷமிந்திர ராஜபக்சவைக் கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய தானியங்கி மின்-நுழைவாயில்களில் குழப்பம்- பயணிகள் அவதி

புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு மின்-நுழைவாயில்கள், கடவுச்சீட்டுகளை ஸ்கான் செய்யத் தவறியதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் பாரிய பேரணி

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு – வெளியானது அரசிதழ்

சிறிலங்காவில்  அவசரகாலச் சட்டம் 2026 ஜனவரி 28 ஆம் நாள் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

2026-27 பாதீட்டில், சிறிலங்காவுக்கான பாதீட்டு  உதவியைஇந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்)  அதிகரித்துள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நீதிக்கான சாட்சி போராட்டம்

கடந்த 1996 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் “நீதிக்கான சாட்சி” என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நியமனம்- செவ்வாயன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்டுள்ள மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவின் நியமனம் தொடர்பாக, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை கூடிய தீர்மானிக்கவுள்ளது.