மேலும்

பிரிவு: செய்திகள்

கட்டுநாயக்கவில் 110 கிலோ போதைப்பொருளுடன் 22 பௌத்த பிக்குகள் கைது

1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த  22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 16 இற்குள் ரஷ்யாவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா முயற்சி

அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள,  விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை எச்சரித்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரெஞ்சு கடனை திருப்பி செலுத்தும் ஆவணங்களும் மாயம்- திறைசேரிக்கு அடுத்த அதிர்ச்சி

பிரான்சிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.

2.5 மில்லியன் டொலர் திருட்டு- அனைத்துலக நாணய நிதியம் உன்னிப்பாக கண்காணிப்பு.

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடுருவிகளிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

திறைசேரியில் 2.5 மில்லியன் டொலர் திருட்டு- குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

வெளிநாட்டுக் கடன் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

காணாமல் போன 2.5 மில்லியன் ரூபா பணம்- விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

அவுஸ்ரேலிய கடனுக்கான தவணையாகக் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் காணாமல் போனது குறித்து விசாரிக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஐந்து பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமித்துள்ளது.

நீதிவானிடம் சாட்சியமளிக்க சுரேஷ் சாலே விருப்பம்- ஒரு மாத அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவை, கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா நீடித்து உத்தரவிட்டுள்ளார்.