மேலும்

நாள்: 29th November 2017

கோத்தாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – சுதந்திரக் கட்சிக்கு மகிந்த அணி நிபந்தனை

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதானால், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி.

ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை – கூட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி?

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

புலிகளை நினைவுகூர்ந்தவர்கள் குற்றவாளிகளாம் – மிரட்டுகிறார் ருவான்

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிபரை எதிர்பாராமல் சந்தித்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், தென்கொரிய அதிபர் மூன் ஜா-இன்னும் நேற்று எதிர்பாராத வகையில் திடீரெனச் சந்தித்தனர்.

சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு- வவுனியா வளாகம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள- தமிழ் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, வளாகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

மகிந்த – மைத்திரி அணிகளை இணைக்கும் பேச்சு தோல்வி

உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.