மேலும்

நாள்: 13th November 2017

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மீதான தாக்குதல்

செப்ரெம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட சிறிலங்காவின் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மீதான இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் எனவும் இவர்கள் கொல்லப்பட வேண்டும் எனவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்

சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.

அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்

போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்

அடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள்,  இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பந்து இப்போது என் கையில் – என்கிறார் தேர்தல்கள் ஆணைய தலைவர்

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.