மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்

சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஐதேகவை ஒருங்கிணைக்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி

ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு நிகழ்வுகளை பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும், சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளை தமது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணையகம் எச்சரித்துள்ளது.

இரு வாரங்களில் ரூ. 19.6 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை இழந்த  சிறிலங்கா

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு வாரங்களில் 19.6 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறைகள், பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

வீணை சின்னத்திலேயே போட்டி – ஈபிடிபி முடிவு

ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஈபிடிபி வடக்கு, கிழக்கில் சொந்தச் சின்னத்திவேயே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு விரைவில் பொதுமன்னிப்பு?

மிருசுவிலில் எட்டு தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவுள்ளார் என்று இரண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேட்புமனுவில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்

பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா நிபுணரின் அறிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு

மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.