மேலும்

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் இந்திய கடற்படை துணைத் தளபதி

இந்திய கடற்படையின் துணைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத்துறை) றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா (Srinivas Maddula), சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய பாலியல் வன்முறை பற்றிய ஐ.நாவின் புதிய அறிக்கை, சிறிலங்காவில் அனைத்துலக சட்டமீறல் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான போராட்டத்தின் மற்றொரு படியாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

மோதல்களின் போது, பாலியல் வன்முறையில் ஈடுபட உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க  தவறியவர்கள்  மீது வழக்குத் தொடரும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது

சிறிலங்காவில் போரின் போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா விருப்பம்

சிறிலங்காவுடன் மூலோபாய கூட்டுறவு பங்காண்மையை ஆழப்படுத்த சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் விடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார்.

டாவோஸ் மாநாட்டில் சிறிலங்கா சார்பில் பிரதமர் ஹரிணி பங்கேற்கிறார்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்கு, சிறிலங்கா குழுவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை.

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.