மேலும்

இந்தியாவை அகற்ற கோட்டா-மொரகொட சூத்திரத்தைப் பயன்படுத்தும் அனுர

இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது- ஜெனரல் சவேந்திர சில்வா வேதனை

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தடைகள் வெளிநாடுகளுக்கான தனது பயணங்களைத் தடுத்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினரின் ஏற்பாட்டில் நாளையும் தனியாக போர் வெற்றி விழா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வு ஒன்று நாளையும் கொழும்பில்நடைபெறவுள்ளது.

தமிழினப் படுகொலை நினைவேந்தல்- கனடியப் பிரதமர் கார்னியின் அறிக்கை

பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தலைமையிலேயே நாளை போர் வெற்றி விழா

16 ஆவது போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்கவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் சேனாரத் கொஹன்ன தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – தடுக்க முயன்றதால் பதற்றம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது.

இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம்!- முள்ளிவாய்க்கால் பிரகடனம்

வரலாறு கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி, அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், இன விடுதலைக்காகவும் இறந்துபோனவர்களின் கனவு நனவாக, இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம் என முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

அனுர மீது குற்றம்சாட்டியவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கிரேக்க நாட்டில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளார் என குற்றம்சாட்டிய, தேசிய லொத்தர் சபையின், முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒருவராய் இல்லாமல்  ஒன்றாய் எழுவோம்!

மே 18. பல்லாயிரம் தமிழர்களின் குருதி குடித்த போர், ஓய்வுக்கு வந்த நாள். வன்னியில் சுழன்றடித்த, சிங்களப் பேரினவாதச் சுழல் தமிழர்களின் உயிர்குடித்து, களைத்துப் போன நாள்.