மேலும்

பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு,  இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையை ஆராய காவல்துறை அதிகாரிகள் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரிப்பதற்கு, நான்கு பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் – என்பிபி இரட்டைவேடம்

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்

சிறிலங்கா காவல்துறையில் உள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறுத்தி வைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் வரை, அதனை பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலாளர் நாயகமாக மூத்த இந்திய அதிகாரி

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) அமைப்பின் முதலாவது, செயலாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரை இந்தியா நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறைகளை தடுக்கக் கூடிய அறிக்கைகளை, வெளியிட வேண்டாம் என்று, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

வேட்புமனுக்கள் தொடர்பான 60 மனுக்கள் தள்ளுபடி

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சுமார் 60 ரிட் மனுக்களை சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு பேராயர் வேண்டுகோள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்காக,  சுயாதீனமான வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுமாறு, கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.