மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சிறிலங்காவுக்கு கடும் நிபந்தனைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா கடும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜேவிபி தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுளள்து.

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பீஜிங் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை, சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் ஹுனிங், சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதி

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதிபூண்டுள்ளதாக  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கனிம மணல் அகழ்விற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு

மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள  கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

சீனப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.

தமிழரின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதே ராஜீவின் திட்டம் – மணிசங்கர் ஐயர்

சிறிலங்கா பிளவுபடுவதை தடுக்கவும் தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவுமே ராஜீவ்காந்தி, இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டார் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர்  ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.