மேலும்

நாள்: 5th November 2017

சிறிலங்காவில் தூதரகம் அமைக்க இடம்தேடுகிறது நியூசிலாந்து

சிறிலங்காவில் தூதரகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை குறித்து இணையவழி கருத்துக்கணிப்பு நடத்த முடிவு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பு வந்தது பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், பிஎன்எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மகிந்தவுக்கு முந்திரி கொடுத்த மலிக் சமரவிக்கிரம

அரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று சிறிலங்கா அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து ரகர் போட்டியை கண்டு களித்தனர்.

சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்

சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா கைத்தொழில் பணியகம்- ரணில் திறந்து வைத்தார்

அம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன.

ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது ஈபிஆர்எல்எவ்

தமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 148 மில்லியன் ரூபா சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கப்பட்டது

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறுவதற்கு, 148 மில்லியன் ரூபா, சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.