மேலும்

நாள்: 25th November 2017

வடக்கில் காணிகள் விடுவிப்புக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை

வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க,  நாடாளுமன்றத் தெரிவுக்குழு  ஒன்றை அமைக்க வேண்டும் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டபடி தேர்தல்?

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடடப்படும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், 133 உள்ளூராட்சி சபைகளுக்கு திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வர்த்தமானிக்கு எதிரான வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனு – சட்டமா அதிபர் தாக்கல் செய்கிறார்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரும், மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய இணங்கியுள்ளார்.

கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

கோத்தாவைக் காப்பாற்றிய சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இடைநிறுத்தினார் என்று ‘ராவய’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.