மேலும்

நாள்: 28th November 2017

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு – மைத்திரியை விமர்சிப்பதற்குத் தடை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – அஞ்சல் மூலம் வாக்களிக்க டிசெம்பர் 15இற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள்  டிசெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தென்கொரியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை தென்கொரியாவைச் சென்றடைந்தார்.

புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – என்கிறார் சம்பிக்க

போரில் மரணமான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமரசம் பேச கரு, ரணில், சுமந்திரனைக் கொண்ட மூவரணி நியமனம்

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள ஆறு மனுதாரர்களுடன சமரசப் பேச்சுக்களை நடத்த சபாநாயகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை 30ஆம் நாள் விசாரிக்கக் கோரி சட்டமா அதிபர் மனு

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு அரசில் இருந்து விலகினாலேயே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் – பீரிஸ்

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.