மேலும்

மாதம்: January 2026

கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு  விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு  பயிற்சியளித்துள்ளனர்.

ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுச்செயலாளரை நியமிக்காத 8 கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விரைவாக உதவும் அமெரிக்காவின் திறனுக்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு

விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் திறனுக்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

100 மில்லியன் ரூபா செலவில் சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்

சிறிலங்காவின் 78வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில்  100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னர் நிராகரித்தவரே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை -மீண்டும் இழுபறி

ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை  கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

ஜனவரியில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக்குறியீட்டின் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பணவீக்கம்  2.3% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை  மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தங்களாலேயே பதவி விலகினார் ஹர்ஷ அபேவிக்ரம

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்தே, விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம  பதவி விலகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சிறிலங்காவுக்குப் பயணம்

அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் – அதிபர் செயலகத்துக்கு 4 கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை

தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு பலமுறை  கடிதம் எழுதிய போதும், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.