மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை

டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மிர் கொடுப்பனவு முறையை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரிப்பு

ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா பொதுச் சபையில் பதுங்கிக் கொண்டது சிறிலங்கா

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை,  தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.

கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு

கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ  அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின்  புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் ரஷ்ய போர்க்கப்பல்கள்

ஒரே வாரத்தில் ரஷ்ய கடற்படையின் மூன்றாவது போர்க்கப்பல், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் கேட்கும் சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டொலர் வரை கடனைப் பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் அதிக முதலீடுகளை வலியுறுத்துகிறது அனைத்துலக தொழிலாளர் அமைப்பு

போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்திற்கு அதிக முதலீடுகள், ஒழுக்கமான வேலை நிலைமைகள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் தேவைப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நிலவரம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கவலை

சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் கவலை வெளியிட்டுள்ளார்.

சுங்க பணிப்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரி – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

சிறிலங்கா சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே, பதவியில் இருப்பார் என்று  சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமக்கு உறுதியளித்துள்ளார் என்று சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.