மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது- ஜெனரல் சவேந்திர சில்வா வேதனை

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தடைகள் வெளிநாடுகளுக்கான தனது பயணங்களைத் தடுத்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய- பிரித்தானிய உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு ஆபத்து

இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மையில்  கையெழுத்திடப்பட்டுள்ள, சுதந்திர வர்த்தக உடன்பாடு சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுரவின் ஆட்சியில் 12 பேர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச்சட்டம்

சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர்  மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வர்த்தக குழுவுடன் கொழும்பு வருகிறார் சீன அமைச்சர்

சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ,( Wang Wentao ) மிகப் பெரிய வர்த்தக குழுவுடன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி

ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

சபைகளில் ஆட்சியமைக்க முனையும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறார் அனுர

தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீறி, உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளூராட்சி சபையின் ஆட்சியும், மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் நின்று பிடிக்க முடியாது என, சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் கொடையை ஏற்பதா என்று சிறிலங்காவே தீர்மானிக்குமாம்

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்துள்ள 62 மில்லியன் டொலர் கொடையை ஏற்றுக்கொள்வது குறித்து சிறிலங்காவே தீர்மானிக்கும் என்று, சிறிலங்காவின் துறைமுகங்கள்,  சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான விசாரணை – தட்டிக்கழிக்கும் ஆணைக்குழு, காவல்துறை

தேர்தல் பரப்புரைக் காலத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிறிலங்கா காவல்துறையும் தட்டிக்கழித்துள்ளன.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாரில்லை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா கவலை வெளியிட்டுள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திடம் விபரம் கோருகிறது வெளிவிவகார அமைச்சு

கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.