மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

வெடிக்கப் போகும் குண்டின் திரியைப் பற்ற வைத்துள்ள சஜித்

“அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியாது… ஆனால் அவர் ஒரு திருடன் அல்ல.” 2013-ல் ரணில் பிரதமரானபோது, ​​அவருடன் இணைக்கப்பட்டிருந்த அடைமொழி இதுதான்.

ஆசிய-பசுபிக்கில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா

மேற்காசிய போர் நெருக்கடியின்  விளைவுகளால், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உருவெடுத்து வருவதாக ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – பின்லாந்து எம்.பி வலியுறுத்தல்

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா பொறுப்பேற்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்காக, சிறிலங்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை ஹெல்சிங்கி பயன்படுத்த வேண்டும் என்று பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஈரானிய படையினரை திருப்பி அனுப்பினோம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான  போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ்  கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனாவை எதிர்கொள்ள சிறிலங்காவில் கடல்சார் இருப்பை அதிகரிக்கும் இந்தியா

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.

ஈரானிய கடற்படையினரை திருப்பி அனுப்பும் விவகாரம்- உத்தரவாதம் கோரும் இஸ்ரேல்

சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய கடற்படையினரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் உத்தரவாதம் கோரியுள்ளது.

ஹெய்டிக்கான கும்பல் ஒடுக்கும் படையில் இணைவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

ஹெய்ட்டியில் ஐ.நா ஆதரவுடன் நடைபெறும், சர்வதேசப் பணிக்கு பங்களிப்பது குறித்த சாத்தியங்களை அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் ஒப்பந்தம்- இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு எம்ஐ -17 உலங்குவானூர்திகளை  (SMH 599, SMH 596, SMH 588, SMH 4416) பழுதுபார்ப்பதற்காக, ஜோர்ஜிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

ஈரானிய கடற்படைக் கப்பலை திருகோணமலை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக  கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.