இன்று இந்தியா செல்கிறார் ரணில் – மோடியுடனும் பேசுவார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று பெங்களூர் செல்லும் சிறிலங்கா பிரதமர், உடுப்பி அருகே உள்ள மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
அதன் பின்னர் பெங்களூரில் தங்கியிருந்து விட்டு, நாளை புதுடெல்லி செல்வார். அங்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களில; ஈடுபடவுள்ளார்.
புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, அவர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், புதுடெல்லியில் உள்ள ஏரோசிற்றியில், வரும் வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ள, 5 ஆவது பூகோள மின்வெளி கருத்தரங்கின் தொடக்க விழாவிலும் சிறிலங்கா பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, சிறிலங்கா பிரதமரின் செயலர் மற்றும் மேலதிக செயலர், சிறப்பு உதவியாளர் ஆகியோரும் இந்தியா செல்லவுள்ளனர்.