மேலும்

பதவிநீக்கத்துக்கு எதிரான டெனீஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Supreme Courtவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, தொடர்ந்து விசாரிக்குமாறு சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரால் பதவிநீக்கப்பட்டதை அடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் டெனீஸ்வரன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவைத் தொடர்ந்து விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *