மேலும்

மாதம்: July 2025

கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு

இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதிமன்றில் முன்னிலையாக கோட்டா தொடர்ந்து மறுப்பு

ஜேவிபி செயற்பாட்டாளர்கள் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஓராண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோவின் பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகள் 115 ஆக உயர்வு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு, ஒரு தலைவரை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு  உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் விநியோக உரிமை அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதா?

எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த தீவுகளின் பட்டியல் – முதலிடத்தில் சிறிலங்கா

உலகின் 50 மிகச் சிறந்த தீவுகளின் பட்டியலில் சிறிலங்கா இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

செம்மணியில் இன்றும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 07 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி அகழ்வு – சர்வதேச மேற்பார்வை அவசியம்

செம்மணி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வில்,  சர்வதேச மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உறுதி செய்யுமாறு,  சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு (ICJ) சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.