மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பதிலளிக்கும் வாய்ப்பு மறுப்பு -எழுத்துமூல பதிலளிப்பை தவிர்த்தது சட்டவாளர் சங்கம்

உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் வாய்மொழி வாதங்களுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பு  மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டதால் 22வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான எழுத்துமூலப் பதில்களை அளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சட்டவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இருதரப்புத் திட்டங்கள் குறித்து மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தினார் இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர்  சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும்  இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார்.

மிக் போர் விமான கொள்வனவு மோசடி- விமானப்படை அதிகாரிகளிடம் புதிய விசாரணை

15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 8 மிக் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொள்முதல் செய்து, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக குறித்து, சிறிலங்கா விமானப்படையின் தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் குழுவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

22ஐ நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு தேவையில்லை – சட்டமா அதிபர் வாதம்

முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுவாக்கெடுப்பு நடத்தாமலேயே , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று, சட்டமா அதிபரும், பல குறுக்கீட்டு மனுதாரர்களும், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக  அதிகரிப்பு

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக  அதிகரித்துள்ளது.

சீனாவுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு- சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

குடியேற்ற ஒழுங்குமுறை ஒத்துழைப்பு தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும் இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்

சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

பெலவத்தையில் ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சீனாவின் புதிய தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்களின் மீது தொடங்கியது விசாரணை

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் மீதான பரிசீலனையை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஆரம்பித்துள்ளது.