மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதி

பிராந்திய செழிப்பு மற்றும் மீள்தன்மைக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, பிம்ஸ்டெக்குடன் நெருக்கமாகப் பணியாற்ற சிறிலங்கா  உறுதிபூண்டுள்ளதாக  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கனிம மணல் அகழ்விற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு

மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள  கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

முதலீடுகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தார் சிறிலங்கா அதிபர்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாட்டிற்குள் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக குற்றப் பதிவைக் கொண்ட நாட்டையே கைப்பற்றியுள்ளோம்

அதிக குற்றப் பதிவைக் கொண்ட ஒரு நாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைப்பற்றியுள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிசாம் காரியப்பரை வெளியேற்ற வேண்டும்- ஆளும்கட்சி போர்க்கொடி

நிசாம் காரியப்பரை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளும்கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

எல்லை நிர்ணய செயல்முறைக்கு பின்னரே மாகாணசபைத் தேர்தல்

எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர், அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிப்பு – சர்ச்சையை கிளப்பிய எக்ஸ் பதிவு.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை கண்டுபிடித்து விட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்  வெளியிட்ட எக்ஸ் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்ற உத்தரவுக்கு காத்திராமல் விசாரணையை தொடங்க வேண்டும்

சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் தொடர்பான அகழ்வுகள் குறித்து நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல்,  புலனாய்வு அமைப்புகள், விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அதிபரிடம் சான்றுகளை கையளித்தார் உதேனி ராஜபக்ச

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசவிடம் நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.