மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருக்கு வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கும்

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்தார்.

18ஆம் நாள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் நாள்  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீண்ட வாதங்களுக்குப் பின்னர் சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச் செயலாளர் சாகர கரியவசம், கடுவெல நீதிவான் அருண புத்ததாசவினால்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தவாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் வகையிலான,  22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி

உயர்நீதிமன்றம்  மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும்,  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து  ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.

நீதியரசர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தம் அரசிதழில் வெளியீடு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கான சட்டமூலம்  அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.

குருவிட்ட சிறையில் துப்பாக்கிச் சூடு – வன்முறையில் 2 பேர் பலி, 12 பேர் காயம்

இரத்தினபுரி- குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் குருவிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையிலும் பதற்றம்

நீர்கொழும்பு – பல்லன்சேன திறந்தவெளி சிறையிலும் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

குருவிட்ட சிறைச்சாலைக்குள்ளேயும் இன்று காலை வெடித்தது மோதல்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை  கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.