மேலும்

மாதம்: July 2017

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்

ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பூரில் நிரந்தரமாக நிலைகொள்கிறது சிறிலங்காவின் மரைன் பற்றாலியன்

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, மரைன் பற்றாலியன், திருகோணமலை சம்பூரில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அழைப்பு

சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் திணைக்களத்தில் வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தமும், இலங்கைத் தீவில் இந்தியாவின் 30 ஆண்டு இராஜதந்திரமும்

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் ஈழத்தமிழ்த் தேசம் தனது விடுதலைப் போராட்டப் பாதையில் இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதனுடன் கூடவந்த இடர்களையும் அழிவுகளையும் அசைபோட்டுப் பார்க்க வேண்டிய நிலையிலுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு – சீன நிறுவனத்துடன் சிறிலங்கா கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் உடன்பாடு இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வொசிங்டனுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய வந்த இவர், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

சம்பந்தனிடம் விடைபெற்றார் கனடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்

கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும், அம்மையார் நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.

8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை

போர் முடிவுக்கு வந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் போர்க்கால மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் நீதியைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாக, அனைத்துலக முரண்பாட்டுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு பாதகமல்ல – ரணில்

இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.