மேலும்

நாள்: 6th July 2017

வடக்கு முதல்வரைச் சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா மரைன் படையினருடன் இராணுவ கொமாண்டோக்கள் சிறப்பு போர்ப் பயிற்சி

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைப்பிரிவுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையின் மரைன் கொமாண்டோக்கள் சிறப்புப் போர் ஒத்திகை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.

சட்டங்களை மதத் தலைவர்களே தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் நாங்கள் எதற்கு? – சுமந்திரன்

அரசியலமைப்புச் சட்ட வரைவை மக்கள் முன் வைத்து, அவர்களின் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

விக்கியின் கோரிக்கை பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பான தேவையின்றிக் கவலைப்படக் கூடாது என்று சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்துக்கு 6.2 மில்லியன் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்– ஜேவிபி

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 6.2 மில்லியன் மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்துக்கான நிலமீட்பு பணிகள் 45 வீதம் பூர்த்தி

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக, கடலில் இருந்து நிலத்தை மீட்கின்ற 45 வீத நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சிஎச்ஈசி போர்ட் சிற்றி கொழும்பு நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி லியாங் தோ மிங் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களும் சங்க சபாக்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் சமூகம் கிழக்கில் கூடுதல் கரிசனையை செலுத்தி வருகிறது- அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல்வேறு விடயங்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் இரண்டு சமூகங்களுடன் போட்டிபோட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். இந்த விடயங்களை கருத்தில் கொண்டே எமது புலம்பெயர் சமூகம் கிழக்கு மாகாணத்தில் கூடுதல் கரிசனையை வெளிப்படுத்தி வருகிறது.

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவொரு போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, ஆனாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான  ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.