கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அழைப்பு
சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் திணைக்களத்தில் வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாகவே இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தி வருகிறது. சிறிலங்கா அரசாங்கமும், உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தது.
இந்தப் பின்னணியிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுக்கான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.