இந்தியாவுடனான ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு பாதகமல்ல – ரணில்
இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,
“திருகோணமலை துறைமுக எண்ணெய்க் களஞ்சியத்தை இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழு ஆய்வு செய்யும். தொழிற்சங்கங்களுடனும் கூட ஆலோசிக்கப்படும்.
இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு திட்டங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக, 2 – 3 பில்லியன் முதலீடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.