மேலும்

நாள்: 18th July 2017

சம்பந்தனுடன் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொமடோர் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் – என்கிறார் கம்மன்பில

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச்செயலர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

டெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை

வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ் உணர்வாளர், சிந்தனையாளர் ஓவியர் வீர.சந்தானம்

ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தானம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக உருவெடுத்தார்.  கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும்,ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.

சிறிலங்கா வருகிறார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் – முதலமைச்சருடனும் சந்திப்பு

ஐந்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பான விசாரணைகள், யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு அரசியல்வாதிகளே நாவற்குழி விகாரை அபிவிருத்திக்கு தடை- விகாராதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு அடுத்த மாதம் கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் அடுத்தமாதம் கையெழுத்திடவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.