இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்
இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் இன்று மாலை ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், இன்று பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.