மேலும்

மாதம்: July 2017

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சீன – சிறிலங்கா உறவுகளால் இந்திய நிபுணர்கள் அச்சம் – இந்திய ஊடகம்

வளர்ந்து வரும் சிறிலங்கா- சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் சீனாவின் கணினிகள் – உறுப்பினர்கள் பயன்படுத்த வசதி

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.

இந்தியாவிடம் வாங்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய எல்லையிலேயே நிறுத்துகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய போர்க்கப்பல், வெளிநாட்டவர்களின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை முறியடிக்க  பாக்கு நீரிணையில் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆரம்பித்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்கா முழுவதற்கும் விரிவாக்கம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்  இரண்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை, நாடு முழுவதிலும் விரிவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொக்குவிலில் வாள்வெட்டு – இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயம்

கொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி, கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், படுகாயமடைந்தனர்.

மகிந்த ஆட்சிக்கு வந்ததும் அம்பாந்தோட்டை உடன்பாட்டை கிழித்தெறிவோம் – பசில் ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன்  The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

ஜூலை 29 : 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன், இப்போது சீனாவுடன்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

ஐதேகவின் விருப்புக்கு மாறாக நடந்த புதிய வெளிவிவகாரச் செயலர் நியமனம்

ஐதேக தலைவர்களின் விருப்பங்களுக்கு முரணாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், புதிய வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.