மேலும்

நாள்: 26th July 2017

தீவிரவாத பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும்  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை கையில் எடுத்தது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எரிபொருள் விநியோகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி?

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்திய- சிறிலங்கா உடன்பாடே பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – நவீன் திசநாயக்க

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் துப்பாக்கிச் சூடு- சரணடைந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று சீன இராணுவத்தின் ஆண்டு விழா

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா இன்று சிறிலங்காவிலும் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.