மேலும்

மாதம்: July 2017

சிராந்தியும், யோசிதவும் விசாரணைக்கு வராமல் நழுவினர்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த சிராந்தி ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், முன்னிலையாகவில்லை.

ஓகஸ்ட் 4ஆம் நாள் வித்தியா கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியப்பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் நடைபெறவுள்ள  தீர்ப்பாயத்தின் அமர்வில் அளிக்கப்படவுள்ளது.

வட மாகாணசபையின் வெகுமதி ஆசனத்துக்கு ஜெயசேகரம் – புளொட் கடும் எதிர்ப்பு

வடக்கு மாகாணசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெகுமதி ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வதில், தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கொழும்பு வந்த ‘சயுரால’ போர்க்கப்பலுக்கு பெரும் வரவேற்பு

இந்தியாவின்  கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துப் படகு இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு நாளை கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு திட்டமிட்டபடி நாளை கைச்சாத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆவது தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இன்று பதவியேற்றுக் கொண்டார்.

யார்க்கரு பகுதியில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

கொழும்பில் கோத்தா பறித்த வீட்டை தமிழரிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் தமிழ் இணையருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டை சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்தமை  அடிப்படை உரிமை மீறல் என்று தீர்ப்பளித்துள்ள சிறிலங்காவின் உச்சநீதிமன்றம், அதன் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இராணுவ ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கப்பலில் அகதிகள் கடத்தப்பட்ட வழக்கு – 4 தமிழர்களையும் விடுவித்தது கனேடிய உயர்நீதிமன்றம்

எம்.வி.ஓசன் லேடி கப்பலில் இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு ஏற்றி வந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு தமிழர்களும், குற்றவாளிகள் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.