மேலும்

மாதம்: June 2017

சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி

சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களே நல்லிணக்கத்துக்கு முட்டுக்கட்டை- சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

தையிட்டியில் புதிய விகாரையை அமைக்க காணி அளவீடு

வலி.வடக்கில் உள்ள தையிட்டிப் பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான காணி அளவீட்டுப் பணிகள் நேற்று, மூன்று பௌத்த பிக்குகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலமைச்சருடன் அரசியல் பேசுவதை தவிர்த்த இந்தியத் தூதுவர்

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போது, அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இந்தியத் தூதுவருடன் முதல்வர் விக்கி சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி

இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

வடமாகாண அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில், ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னிலையில் இடம்பெற்றது.

32 இலங்கையர்களை சிறப்பு விமானத்தில் நாடு கடத்தியது பல்கேரியா

பல்கேரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 32 இலங்கையர்கள் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா மத்திய வங்கியின் யாழ். பணியக செயற்பாடுகள் கிளிநொச்சிக்கு மாற்றம்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய உதவிப் பணியகத்தின் செயற்பாடுகள், கிளிநொச்சி அறிவியல் நகரில் செயற்படும், சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.