மேலும்

Tag Archives: மட்டக்களப்பு

மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினர் சூடு – தப்பியோடிய இளைஞன் பலியானதால் பதற்றம்

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ஆற்றில் குதித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதை அடுத்து, மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா மரைன் படையினருடன் இராணுவ கொமாண்டோக்கள் சிறப்பு போர்ப் பயிற்சி

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைப்பிரிவுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையின் மரைன் கொமாண்டோக்கள் சிறப்புப் போர் ஒத்திகை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.

கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை

அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை.

தமிழர் தாயகத்தில் அன்னை பூபதி நினைவு கூரல் நிகழ்வுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி,  நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.

மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

விசாரணையைச் சந்திக்காமல் ஓடுபவனுக்கு முதுகெலும்பு இல்லை – மைத்திரிக்கு சுமந்திரன் பதிலடி

எந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், விமல்ராஜ் நேசகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு- களுதாவளையில் உள்ள, அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

11 தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் – சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு

2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய பிள்ளையானே உத்தரவிட்டார் – சட்டமா அதிபர்

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.