மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயன்பாட்டுக்கான விமான நிலையமாக இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை பொறுப்பேற்று, சிவில விமான நிலையமாக இயக்கவுள்ளது.
சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா இதனைத் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த விமான நிலையத்தில் தேவையான இடவசதி இருப்பதால், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர்கள், விமானப் பயிற்சி பாடசாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.