மேலும்

மாதம்: June 2026

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது,  2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு  4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நீர்மூழ்கிகளை நிறுத்த திட்டமிடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடற்படை பிஎன்எஸ் ஹங்கோர் நீர்மூழ்கியை இணைத்துக் கொள்வதன் மூலம், வங்காள விரிகுடாவில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சாலே கொழும்பு மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே, நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரானிய எண்ணெயை ஏற்றும் கப்பலை சிறிலங்காவுக்கு தெற்கே கைப்பற்றியது அமெரிக்கா

சிறிலங்காவின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள அனைத்துலக கடற்பரப்பில், எம்.ரி. டவினா (MT Davina) என்ற, நாடற்ற, தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை, அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளது.

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்- 300ஐ தாண்டியது

யாழ்ப்பாணம் – செம்மணி  சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மகனிடம் அழுது புலம்பிய சுரேஷ் சாலே- சாகும்வரை உண்ணாவிரதம்

குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிராக கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 13 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து, நேற்று மட்டும் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இராணுவ மயப்படுத்தப்பட்ட ‘1990’ நோயாளர் காவு வண்டி சேவை

இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய என்ற கட்டணமற்ற நோயாளர் காவு வண்டிச் சேவை இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அதன் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவின் திறனை விட கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு

கடல்சார் பாதுகாப்புச் சூழலில், அவற்றை எதிர்கொள்ளப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் திறனை விட, வேகமாக மாறிவரும் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொண்டுள்ளதாக, கொழும்பை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.