மேலும்

Tag Archives: மட்டக்களப்பு

வடக்கு, கிழக்கில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள்

ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

பொது பலசேனாவுக்கு மட்டக்களப்பில் நுழைய தடை – நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரர்

மட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவைக் கிழித்தெறிந்த, கலகொடஅத்தே ஞானசார தேரர், பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், தம்மை மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் தடுப்பது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

முன்னாள் போராளிகள் கைதுகளின் பின்னணி என்ன? – சிறிலங்கா அரசிடம் கூட்டமைப்பு கேள்வி

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி – ‘எட்டாத பழம் புளிக்கும்’ என்கிறார் சம்பந்தன்

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற இலக்கைப் பலவீனப்படுத்துவதாக அமையும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன்

சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

கவலைக்கிடமான நிலையில் 15 அரசியல் கைதிகள் – மருத்துவ உதவிகளை நிராகரிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான, பிள்ளையான் எனப்படும், சிவநநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது நாளை எட்டியது 217 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

சிறிலங்காவில் நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்

சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.