மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்
மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர், விமல்ராஜ் நேசகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். மட்டக்களப்பு- களுதாவளையில் உள்ள, அவரது வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.




