மேலும்

விசாரணையைச் சந்திக்காமல் ஓடுபவனுக்கு முதுகெலும்பு இல்லை – மைத்திரிக்கு சுமந்திரன் பதிலடி

sumanthiranஎந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

மட்டக்களப்பு- செங்கலடியில் இன்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்குடா தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டசபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு நிகழ்வில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பலாலியில் சிறிலங்கா படையினர் மத்தியில் அண்மையில் உரையாற்றிய போது எந்தவொரு படைவீரருக்கும் எதிராக வழக்குத் தொடுக்க விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

அது முதுகெலும்புள்ள ஒருவர் கூறுகின்ற செய்தியல்ல.

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் என்று சொல்பவனுக்குத் தான் முதுகெலும்பு இருக்கிறதே தவிர, எந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபருக்கு கூறிவைக்க விரும்புகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *