மேலும்

20 ஆயிரம் பேருக்கு விரைவில் அபிவிருத்தி உதவியாளர்களாக நியமனம்

ranilதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால், அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூரில் நேற்று புதிய நகரசபை கட்டட வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே, சிறிலங்கா பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“அபிவிருத்தி உதவியாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.

சிறிய நடுத்தர தொழிற்துறை மற்றும் பெண் தொழிற்துறைகளை பலப்படுத்தும் வகையில், புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் கடன் சுமையை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கும் எம்மால் தீர்வு  காணமுடியும்.

கூட்டு அரசாங்கம் மெதுவாக ஆனால், உறுதியாக முன்னேறிச் செல்கிறது. கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *