ஆசிய நோபல் பரிசான ராமன் மக்சாசே விருதைப் பெறுகிறார் இலங்கைத் தமிழ்ப் பெண்
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதுக்கு 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதுக்கு 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் 30 ஆண்டினை எட்டியிருக்கும் நிலையில், தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்தியாவின் பாதுகாப்பா என்ற பேசு பொருளில் கருத்தரங்கம் ஒன்று தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
தீவிரவாதத்தைத் தோற்கடிக்க உதவிய சீனாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. கொழும்பு, காலிமுகத்திடல் விடுதியில் நேற்றிரவு நடந்த, சீன இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எந்தவொரு இராணுவ செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தடை விதிக்கும் வகையிலேயே, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து பெற்றோலிய ஊழியர் தொழிற்சங்கங்கள், தமது போராட்டத்தை வரும் ஓகஸ்ட் 01ஆம் நாள் வரை இடைநிறுத்தியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.
சுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது.
சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எரிபொருள் விநியோகப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.