மேலும்

‘நெருக்கடியான நேரத்தில் சீனா உதவியது’ – சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

PLA-celebrationsதீவிரவாதத்தைத் தோற்கடிக்க உதவிய சீனாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. கொழும்பு, காலிமுகத்திடல் விடுதியில் நேற்றிரவு நடந்த, சீன இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் சிறிலங்காவுக்கு சீனா உதவி வழங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரே சீனா என்ற கொள்கையை சிறிலங்கா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இதனை வலியுறுத்தியிருந்தார் என்றும், ருவான் விஜேவர்த்தன மேலும் தெரிவித்தார்.

PLA-celebrations

அண்மைக்காலமாக சீன இராணுவத்தின் ஆண்டு விழாவை கொழும்பில் உள்ள சிறிலங்கா தூதரகம் பெரியளவில் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *