மேலும்

ஒரே நாளில் மாகாணசபைகளுக்குத் தேர்தல் – புதிய சட்டம் கொண்டு வருகிறது அரசாங்கம்

Gayantha-karunathilakaஅனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில் மாகாணசபை தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்தார்.

இதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

ஒவ்வொரு மாகாணசபைக்கும் வெவ்வேறு காலப்பகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்படுவதால், வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கான அரச சேவைகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகளுக்கு உதவியாக இருப்பதாகவும், தேர்தல் மோசடிகள், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

voteசிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவினால், இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய கிழக்கு,சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு உள்ளிட்ட பல மாகாணசபைகள், முதலமைச்சர்களின் ஒப்புதல்களுடன் முன்கூட்டியே கலைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *