மேலும்

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Refugeesசுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும்  அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த 57 அகதிகள் நேற்று கொழும்புக்குத் திரும்பினர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 39 பேரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 18 பேரும் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

நாளை மேலும் 36 பேர், தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பவுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

2014ஆம் ஆண்டு சுயவிருப்பின் அடிப்படையில், 396 பேரும், 2015 ஆம் ஆண்டில், 452 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். 2017ஆம் ஆண்டில் இதுவரையில், 809 அகதிகள் இதுவரையில் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 1ஆம் நாள் நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 107 முகாம்களில் 62,629 அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 36,794 அகதிகளும் வசிப்பதாக தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *