மேலும்

வடக்கு, கிழக்கில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள்

jallikattu-suport (2)ஏறுதழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்துள்ள பெரும் போராட்டத்துக்கு, உலகத் தமிழர்களின் பேராதரவு கிடைத்துள்ள நிலையில், இன்று கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்று கூடி ஏறுதழுவுதலுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய நிலையில், இன்று இந்தப் போராட்டங்கள் மேலும் பல பகுதிகளுக்கு பரவியது.

சமூக வலைத்தளங்களின் மூலம் விடுக்கப்படட அழைப்பை ஏற்று இன்று பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

jallikattu-suport (1)jallikattu-suport (2)jallikattu-suport (3)jallikattu-suport (4)jallikattu-suport (5)jallikattu-suport (6)jallikattu-suport (7)jallikattu-suport (8)

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இன்று பிற்பகல் 4 மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, திருகோணமலை கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகேயும் ஒரு போராட்டம் இடம்பெற்றது.

மேலும், கொழும்பில் வெள்ளவத்தையிலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதனிடையே இத்தகைய போராட்டங்களில் தொடர்ந்து  பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகிறது. சாவகச்சேரியில் நாளை மறுநாள் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *