மேலும்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறது பொது பலசேனா

அரசியலில் நுழைவது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும், வரும் ஏப்ரலுக்குப் பின்னர் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடக் கூடும் என்று, பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட பேரணி

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில்  பெரியளவிலான அமைதிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் – தேர்தல் பிற்போடப்படலாம்?

இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல், ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

கதிர்காமத்தில் மகிந்த குடும்பத்துடன் வழிபாடு – மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் திட்டம்?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை வழிபாடு நடத்தியுள்ளார்.

சசி வீரவன்சவுக்கு விளக்கமறியல் – மோசடிக்கு விமல் வீரவன்சவும் உடந்தை

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியைப் படுகொலை செய்யும் சதி முயற்சி – மேலதிக விசாரணை நடத்தப்படாதாம்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் முயற்சி தொடர்பாக கிடைத்த தகவல் குறித்து, விசாரணை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி கடமையைப் பொறுப்பேற்றார்

சிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இன்று  இராணுவத் தலைமையகத்தில் அதிகாரபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அச்சு ஊடகங்களுக்கு ரணில் கடும் எச்சரிக்கை

சில அச்சு ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் கட்டுரைகளை வெளியிட்டு,  இனரீதியான குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் வணிகச் செயற்பாடுகளில் இந்தியா தலையிடக் கூடாது – சம்பிக்க ரணவக்க

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும்  வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் முன் உள்ள சவால்கள் – அனைத்துலக ஊடகம்

ராஜபக்சக்களால் அனுமதிக்கப்பட்ட சீனாவை சிறிலங்கா தனது நாட்டிலிருந்து வெளியேற்றினால் இந்தியா மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இந்த விடயத்தில் சிறிலங்காவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.