மேலும்

இன்றுடன் முடிகிறது சீன – சிறிலங்கா படைகளின் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ போர்ப்பயிற்சி

Silk Road Cooperation-2015  (1)சீன – சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும், ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு-2015’ என்ற குறியீட்டுப் பெயரிலான, இருபது நாள் கூட்டுப் போர்ப்பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

சிறிலங்கா படையினரும், சீனாவின் மக்கள் ஆயுதக் காவல்படையும், இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியை கடந்த மாதம் 29ம் நாள் ஆரம்பித்திருந்தன.

சீனாவின் தென்பகுதியில் உள்ள குவாங்டொங் பகுதியில் உள்ள, மக்கள் ஆயுதக் காவல்படையின் இராணுவப் பயிற்சித் தளத்தில், கடந்த 20 நாட்களாக நடந்து வந்த பயிற்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இதில் பிரதானமாக, தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான பயிற்சிகளே இடம்பெற்றுள்ளன.

Silk Road Cooperation-2015  (1)

Silk Road Cooperation-2015  (2)

Silk Road Cooperation-2015  (3)

Silk Road Cooperation-2015  (4)

Silk Road Cooperation-2015  (5)

இரண்டாவது கட்ட பயிற்சி சிறிலங்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

இதில் சிறிலங்காவின் சிறப்புப் படைப்பிரிவுகளுடன் இணைந்து சீனப்படையினர் போர்ப்பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *