மேலும்

மாதம்: August 2019

இராணுவ புலனாய்வு பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எம்சிசி கொடை உடன்பாட்டில் கையெழுத்திட மைத்திரி மறுப்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்றும், அதனை அடுத்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் எனவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து சேவை நடத்த 5 உள்நாட்டு, 2 இந்திய நிறுவனங்கள் போட்டி

பலாலி விமான நிலையம் ஒக்ரோபர் நடுப்பகுதியில் திறக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து விமான சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளன.

கோத்தாவை கொல்ல முயற்சி?

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு பாதாள உலக குழுவினருடன் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிறது.

எம்சிசி கொடையை இழக்கும் நிலையில் சிறிலங்கா

வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடாவிடின், மிலேனியம் சவால் நிறுவனத்தின் (எம்சிசி) 480 மில்லியன் டொலர் கொடையை, சிறிலங்கா இழக்கும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – சஜித்

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வே தனது கொள்கையாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா வல்லுனர்கள் குழு கவலை

சிறிலங்காஇராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, ஐ.நா வல்லுநர்கள் குழு, கடுமையான கவலை தெரிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்புத் துறையின் நீண்டகால சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறும், கடந்த கால மீறல்கள்  குறித்து விசாரிக்குமாறும் அந்தக் குழு சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

இழுபறியில் ஐதேக கூட்டணி

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த பேச்சுக்களில், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலையில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.