மேலும்

நாள்: 24th August 2019

காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 3

இந்தியாவின் அரசியல் மாற்றங்கள், மிகவும் முக்கியமான வரலாற்று மாற்றங்களாக,  அதனை சூழ உள்ள நாடுகளில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுவது பொதுவான போக்காக உள்ளது.   புவியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும், சமூக, கலாசார ,மொழி, மத ரீதியாகவும், அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.

இராணுவத்தின் பாதுகாப்பு ஒழுங்குகளில் மாற்றம் இல்லை

அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேவையின் அடிப்படையில், சிறிலங்கா இராணுவம் தற்போது மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்த உத்தரவு

அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால், ஆயுதப்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு 19 பேர் போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுக்கு, அந்தக் கட்சியின் 19 உறுப்பினர்களுக்கிடையில் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பாதிப்பு இல்லை- சிறிலங்கா காவல்துறை

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது – ஜெனரல் கொட்டேகொட

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

கீத் நொயார் மீதான தாக்குதல்- மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே

சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார் என, இராணுவ செயலகம் நேற்று அறிவித்துள்ளது.