மேலும்

மாதம்: August 2019

மருத்துவரின் தகவலின் அடிப்படையில் பளையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு

கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபன் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

எஸ்பி.திசநாயக்க பதவி நீக்கம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து எஸ்பி.திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். நேற்று  நடந்த கட்சியின் சிறப்பு மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இன்று முக்கிய பேச்சு

கூட்டணி அமைத்து தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.

தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – பீரிஸ்

இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்குக் கிடையாது என, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 15இல் பலாலி விமான நிலையம் திறப்பு – இன்றைய கூட்டத்தில் முடிவு

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்த திறப்பு விழா நிகழ்வை அடுத்து. இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா

தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.