மேலும்

நாள்: 11th August 2019

அந்தோனியார் தேவாலயத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.

கோத்தாவை அறிவிக்க முன்னர் மகிந்தவை சந்தித்த அமெரிக்க உயர் அதிகாரி

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.

அதிபர் வேட்பாளர் கோத்தா – அதிகாரபூர்வமாக அறிவித்தார் மகிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில்,  சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” –  மகிந்த செவ்வி

சிறிலங்காவில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து புளொட் விலகாது – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகிக் கொள்ளாது என, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைத் தவிர்க்கும் அமெரிக்க உதவிச்செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின்  தெற்கு, மத்திய ஆசிய  பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியைச் சந்திக்கிறார் கோத்தா

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக இன்று பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படும், கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடனான உடன்பாடு – 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாளை பரப்புரையைத் தொடங்குகிறார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நாளை பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘மொட்டு’ மாநாட்டில் மைத்திரி அணியின் 10 எம்.பிக்கள்

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.