இழுபறியில் ஐதேக கூட்டணி
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று நடந்த பேச்சுக்களில், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை.
ஐதேமு தலைவர்கள் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
எனினும், முக்கிய பிரச்சினைகள் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படாமல் இந்தப் பேச்சு முடிவடைந்துள்ளது.
முன்னதாக, இந்த மாத இறுதிக்குள் புதிய கூட்டணி தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஐதேமு கூட்டணித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஐதேக தனது அதிபர் வேட்பாளரைத் தெரிவு செய்யுமாறு கூட்டணித் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அப்போது தான், அந்த வேட்பாளரை ஆதரிப்பதா என்பதை என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
எனினும், ஐதேக தனது அதிபர் வேட்பாளரை இன்னமும் அறிவிக்கவில்லை.