மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிறது.

ஒன்பதாவது ஆண்டாக நடத்தப்படும் இந்த பாதுகாப்பு கருத்தரங்கில், 42 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்கவுள்ளனர் என சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பாதுகாப்புக் கருத்தரங்கில்,  13 வெளிநாட்டு. 14 உள்நாட்டு பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்த பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு 81 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், எனினும் 42 நாடுகள் மாத்திரமே இதில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்றும், மேஜர் ஜெனரல் ஜி.வி.ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்புக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட,ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *