மேலும்

மாதம்: February 2017

மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

சிறிலங்காவில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் கப்டன் அசோக் ராவ்

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக மெல்பேர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும் ஆர்ப்பாட்டம்

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மென்பேர்ண் நகரில் நேற்று தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்கள் முதலீடுகளை பாதிக்கும் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கைத்தொழில் முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே இணங்கியிருந்த முதலீட்டாளர்களைத் திசை திருப்பி விடும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாயட் பாஜ்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் எமக்கு முக்கியமான ஒன்று – சீனா

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்

பரந்துபட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டின், 21 ஆவது முதலமைச்சராக, எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுனர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றார்.  ஆளுனர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில், அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.