மேலும்

மாதம்: February 2017

ஜெனிவாவில் காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்று, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

சுதந்திர போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வட மாகாணசபை முயற்சி

சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை வடக்கு மாகாணசபை உருவாக்குவதற்கான சட்டரீதியான சாத்தியப்பாடுகள் உள்ளனவா என்று, ஆராயப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு

ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்திய இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.